எல்லாவற்றிலும் சக்தி பரவியிருக்கிறாள்

இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக்
கல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும்
வல்லது ஆக வழிசெய்த அப்பொருள்
சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே. – (திருமந்திரம் – 383)

விளக்கம்:
அதுவரை இல்லாத ஒன்றை நம் சிவபெருமான் படைத்தான். அந்தப் படைப்பு தான் இந்த உலகம். இந்தப் படைப்பின் சகலத்திலும், நவமணியில் இருந்து அதன் ஒளியைப் பிரிக்க முடியாதது போல, சக்தி கலந்திருக்கிறாள். சகல இயக்கத்திற்கும் காரணமான அந்த சக்தியின் பெருமையைச் சொல்லலாம் என்றால், அது நம் சிற்றறிவிற்கு எட்டாததாக இருக்கிறது.