சகலத்திலும் சக்தி இருக்கிறாள்

தூரத்திற் சோதி தொடர்ந்தொரு சத்தியாய்
ஆர்வத்து நாதம் அணைந்தொரு விந்துவாய்ப்
பாரச் சதாசிவம் பார்முதல் ஐந்துக்கும்
சார்வத்து சத்திஓர் சாத்துமா னாமே. – (திருமந்திரம் – 384)

விளக்கம்:
நம் எண்ணத்திற்கு எட்டாத சோதியாக இருக்கும் சிவபெருமானைப் பற்றிச் சொல்ல வார்த்தைகள் கிடையாது. அந்த சிவபெருமானை நீங்காமல் தொடர்ந்து இருப்பவள் சக்தி. படைப்பு அனைத்திலும் சிவனும், சக்தியும் சேர்ந்து இருந்து அறிவுக்கும் செயலுக்கும் காரணமாகிறார்கள். சதாசிவன் படைத்த இந்த உலகம், ஐம்பூதங்களால் ஆனது. அந்த ஐந்து பூதங்களையும் செயல்படுத்தும் சக்தியாக சக்தி இருக்கிறாள்.