பிரமன் செய்யும் புண்ணியம்

புவனம் படைப்பான் ஒருவன் ஒருத்தி
புவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர்
புவனம் படைப்பானும் பூமிசை யானாய்
புவனம் படைப்பானப் புண்ணியன் தானே. – (திருமந்திரம் – 386)

விளக்கம்:
இந்த உலகத்தைப் படைத்தது சிவசக்தி ஆவார்கள். அவர்கள் தமது ஐந்து மக்களைக் கொண்டு இந்த உலகை உருவாக்கினார்கள். பிரமன், திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் ஆகியோர் அந்த ஐந்து மக்கள் ஆவார்கள். இவர்களில் படைப்புத்தொழில் செய்யும் புண்ணியம் பிரமனுக்குக் கிடைத்தது. அந்தப் புண்ணியத்தாலேயே அவனுக்குத் தாமரை மலரில் வசிக்கும் உரிமை கிடைத்தது.