காரியக் கடவுளும் காரணக் கடவுளும்

ஆணவச் சத்தியும் ஆம்அதில் ஐவருங்
காரிய காரண ஈசர் கடைமுறை
பேணிய ஐந்தொழி லால்விந்து விற்பிறந்து
ஆணவம் நீங்கா தவரென லாகுமே. – (திருமந்திரம் – 398)

விளக்கம்:
பிரமன், திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் ஆகிய ஐவரின் ஐந்தொழிலால் இந்த உலகம் இயங்குகிறது. ஆணவ மலம் நீங்கப்பெறாத இந்த ஐவரும் காரியக் கடவுள் ஆவார்கள். இவர்களுக்கெல்லாம் மேலே காரணக் கடவுள் ஒருவன் இருக்கிறான். ஆணவம் இல்லாத அவன் நம் சிவபெருமான் ஆவான்.