அவன்தான் எல்லாம்!

தானே திசையொடு தேவரு மாய்நிற்குந்
தானே உடலுயிர் தத்துவ மாய்நிற்குந்
தானே கடல்மலை யாதியு மாய்நிற்குந்
தானே உலகில் தலைவனு மாமே. – (திருமந்திரம் – 412)

விளக்கம்:
நம் தலைவனான சிவபெருமானே இந்த உலகுக்கும் தலைவனாவான். அவனே எல்லாத் திசைகளாகவும் இருக்கிறான். எல்லாத் திசைகளிலும் அவனே இருக்கிறான். திசைகளைக் காக்கும் தேவர்களாக இருக்கிறான். ஆதிக்கடவுளான அவன் நமது உடலாகவும், உயிராகவும், உடலும் உயிரும் பொருந்தியிருக்கும் தத்துவமாகவும் விளங்குகிறான். அவனே கடலாகவும் மலையாகவும் மற்ற அனைத்துமாகவும் இருக்கிறான்.