நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்!

நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்றங் கியங்கும் அரந்திரு மாலவன்
மன்றது செய்யும் மலர்மிசை மேலயன்
என்றிவ ராகி இசைந்திருந் தானே.   – (திருமந்திரம் – 438)

விளக்கம்:
உருத்திரன், திருமால், வாசனை நிறைந்த தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன் ஆகியோர் அங்கும் இங்கும் ஓடியாடி இயங்குகிறார்கள். ஆனால் நம் சிவபெருமான் நின்ற இடத்திலேயே எந்தவித செயலும் இன்றி எல்லாவற்றையும் நிகழ்த்துகிறான்.