கருவிலேயே துணையாக இருப்பவன்!

அறிகின்ற மூலத்தின் மேல்அங்கி அப்புச்
செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிப்
பொறைநின்ற இன்னுயிர் போந்துற நாடிப்
பறிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே.  – (திருமந்திரம் – 452)

விளக்கம்:
தியானத்தினால் உணரக்கூடிய மூலாதாரத்தின் மேலே, நெருப்பும் நீரும் செறிந்துள்ள இடம் ஒன்று உள்ளது. அதுவே கரு உருவாகும் இடம். ஓர் உயிர் கருவாக உருவாகும் போது, ஞானமே உருவான நமது சிவபெருமான், தமது திருவடியை அங்கே பதிக்கிறான். தாம் முழுமையாக உருவாகும் வரை பொறுமையுடன் காத்திருக்கும் கருவான இனிய உயிரில் தானும் கலந்து நிற்கிறான் நம் இறைவன். கருவில் இருக்கும் அந்த உயிரைப் பத்து மாதங்களும் உடன் இருந்து காத்து அருள்பவன், நம் சிவபெருமானே!