பேதைப் புலன்கள்!

பிண்டத்தில் உள்ளுறு பேதைப் புலன்ஐந்தும்
பிண்டத்தி னூடே பிறந்து மரித்தது
அண்டத்தின் உள்ளுறு சீவனும் அவ்வகை
அண்டத்து நாதத் தமர்ந்திருந் தானே.  – (திருமந்திரம் – 466)

விளக்கம்:
பிண்டமெனும் இந்த உடலில் தோன்றும் அறியாமை கொண்ட ஐந்து புலன்களும், இறுதியில் இந்த உடலிலேயே அழிகின்றன. இந்தப் பிரபஞ்சத்தில் தோன்றும் உயிரும் அவ்வாறே! இந்தப் பிரபஞ்சத்தில் தோன்றும் உயிர்கள் இங்கேயே அழிகின்றன. இதெல்லாம் தெரிந்து தான் உயிர்கள் விந்துவில் தோன்றிப் பிறக்கின்றன.