ஒன்பது வாசல்களைக் கொண்ட உடல்

இலைபொறி யேற்றி யெனதுடல் ஈசன்
துலைப்பொறி யிற்கரு ஐந்துட னாட்டி
நிலைப்பொறி முப்பது நீர்மை கொளுவி
உலைப்பொறி ஒன்பதில் ஒன்றுசெய் தானே.  – (திருமந்திரம் – 467)

விளக்கம்:
எனது உடலினுள் நிற்கின்ற சிவபெருமான், எனது விதியை ஏற்கனவே ஓலையில் எழுதி என் தலையில் ஏற்றி விட்டான். அழியக்கூடிய ஐந்து புலன்கள், முப்பது கருவிகள், ஒன்பது வாசல்கள் ஆகியவிற்றின் நடுவே என் உயிரை அமைத்திருக்கிறான் அவன்.

துலை – அழியக்கூடிய

One thought on “ஒன்பது வாசல்களைக் கொண்ட உடல்

Comments are closed.