ஐந்து வகையான பாவங்களை விட்டவர்கள்!

சிவமாகி ஐவகைத் திண்மலஞ் செற்றோர்
அவமாகார் சித்தர்முத் தாந்தத்து வாழ்வார்
பவமான தீர்வோர் பசுபாசம் அற்றோர்
நவமான தத்துவம் நாடிக்கொண் டோரே.  – (திருமந்திரம் – 497)

விளக்கம்:
சிவம் ஆகி ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி ஆகிய ஐந்து வலிமை மிகுந்த மலங்களை வென்றவர்கள் சித்தர்கள் ஆவார்கள். தன் வாழ்நாளை வீணாக்காத அவர்கள் முத்தியை அடைவாரகள். அவர்கள் பசு பாசத்தன்மைகள் நீங்கி அடுத்து பிறவி இல்லாத நிலையை அடைவார்கள். மேலும் அவர்கள் சிவபெருமானின் ஒன்பது தத்துவங்களை நாடி அறிந்து கொள்வார்கள்.