ஒன்பது பிரிவினர்!

விஞ்ஞானர் ஆணவ கேவல மேவுவோர்
தஞ்ஞானர் மாயையில் தங்கும் இருமலர்
அஞ்ஞானர் அச்சக லத்தர் சகலராம்
விஞ்ஞான ராதிகள் ஒன்பான்வே றுயிர்களே.  – (திருமந்திரம் – 498)

விளக்கம்:
விஞ்ஞானகலர் ஆணவமலத்தை மட்டுமே உடையவர்கள். இவர்கள் கன்மம், மாயை ஆகியவற்றில் சிக்க மாட்டார்கள். பிரளயாகலர் ஆணவம், கன்மம் ஆகிய இரு மலங்களை உடையவர்கள். அஞ்ஞானத்தை விடாதவர்கள் சகலர் ஆவார்கள். இந்த மூன்று வகையிலும் வருபவர்கள் உத்தமம், மத்திமம், அதமம் என மூன்று பிரிவுகளாய் இருக்கிறார்கள். ஆக மொத்தம் மனிதர்கள் ஒன்பது வகையான பிரிவுகளில் வேறுபட்டு நிற்கிறார்கள்.

One thought on “ஒன்பது பிரிவினர்!

Comments are closed.