ஞானியை நாடினால் தீவினை தீரும்

ஞானியை நிந்திப் பவனும் நலன் என்றே
ஞானியை வந்திப் பவனுமே நல்வினை
யான கொடுவினை தீர்வார் அவன்வயம்
போன பொழுதே புகுஞ்சிவ போகமே. –  (திருமந்திரம் – 538)

விளக்கம்:
சிவஞானிகளை நிந்திப்பவர்கள், இதுவரை தாம் சேர்த்து வைத்த நல்வினைகளின் பலனை இழப்பார்கள். நன்மையை நாடி ஞானிகளை வணங்குபவர்கள், தம்முடைய தீவினைகள் எல்லாம் நீங்கப்பெறுவார்கள். சிவஞானிகளுக்கு அடியவர் ஆனவர்கள் சிவனருளில் திளைப்பார்கள்.