யோகத்தினால் உடல் பொலிவு பெறலாம்

ஏழா னதிற்சண்ட வாயுவின் வேகியாந்
தாழா நடைபல யோசனை சார்ந்திடுஞ்
சூழான ஓரெட்டில் தோன்றா நரைதிரை
தாழான ஒன்பதிற் றான்பர காயமே. – (திருமந்திரம் – 647)

விளக்கம்:
தொடர்ந்து ஏழு ஆண்டுகள் யோகத்தில் நிற்பவர்களுக்கு சண்டமாருதம் போல் வேகமாக நடக்கும் திறன் வாய்க்கும். அவர்களால் தளராமல் பல யோசனை தூரம் நடக்க முடியும். எட்டாவது ஆண்டில் யோகத்தினால் சூழப்பட்டிருக்கும் போது முடி நரைப்பதும் தோல் சுருங்குவதும் நின்று விடும். ஒன்பதாம் ஆண்டு யோக வாழ்வில் அமிழ்ந்திருக்கும் போது உடல் தேவ சரீரம் போல் பொலிவுடன் காணப்படும்.