அறிவால் அட்டமாசித்தி கிடைக்காது!

நாடும் பிணியாகு நஞ்சனஞ்சூழ்ந்தக்கால்
நீடுங் கலைகல்வி நீள்மேதை கூர்ஞானம்
பீடொன்றி னால்வாயாச் சித்திபே தத்தின்
நீடுங் துரங்கேட்டல் நீண்முடி வீராறே. – (திருமந்திரம் – 646)

விளக்கம்:
உறவினர்களும் சுற்றத்தாரும் நம்மை சூழ்ந்திருந்தால், நோய் தான் நம்மை நாடி வரும். மிகுந்த கலை அறிவு, மேதைமை, கூர்ந்த ஞானம், வலிமை ஆகியவற்றால் அட்டமாசித்திகளை அடைய முடியாது. உலக வாழ்க்கையில் இருந்து வேறுபட்டு, பன்னிரெண்டு ஆண்டுகள் தொடர்ந்து யோகத்தில் நின்று, தியானத்தில் மட்டுமே கேட்கக் கூடிய ஒலியைக் கேட்டு இருந்தால் அட்டமாசித்தி கிடைக்கப் பெறலாம்.