மெய்ப்பொருளை உணர்வோம்!

காயாதி பூதங் கலைகால மாயையில்
ஆயா தகல அறிவொன் றனாதியே
ஓயாப் பதியதன் உண்மையைக் கூடினால்
வீயாப் பரகாயம் மேவலு மாமே.  –  (திருமந்திரம் – 643)

விளக்கம்:
வானம் முதலான ஐந்து பூதங்கள், அவற்றைப் பற்றிய கல்வி, காலம், இவற்றால் ஏற்படும் மாயை ஆகியவற்றில் சிக்காமல் அகன்ற அறிவு ஒன்றை நாடுவோம். புற உலகைப் பற்றிய விஷயங்களைத் தேடாமல் மெய்ப்பொருளை நாடுவோம். மெய்ப்பொருளை நாடும் அகன்ற அறிவுடன், தொடக்கமில்லாத அனாதியான  ஓய்வேயில்லாத சிவபெருமானின் தன்மையை உணர்வோம். மெய்ப்பொருளை உணர்ந்தால் அழிவில்லாத பரவெளியை அடையலாம்.