யோகத்தினால் காமம் குரோதம் அழியும்

ஓடிச் சென்றங்கே ஒருபொருள் கண்டவர்
நாடியி னுள்ளாக நாதம் எழுப்புவர்
தேடிச்சென் றங்கேயுந் தேனை முகந்துண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டுமே. – (திருமந்திரம் – 661)

விளக்கம்:
மூலாதாரத்தில் இருந்து தலை உச்சியில் இருக்கும் சகஸ்ரதளத்திற்கு ஓடிச்சென்று அங்கே சிவபெருமானை உணர்ந்தவர்கள் தமது நாடியுள் நாதத்தை உணர்வார்கள். சிவயோகிகள் அந்த யோகத்தினால் ஊறும் அமுதத்தை நுகர்ந்து இன்புறுவார்கள். இந்நிலையிலேயே தொடர்ந்து யோகம் பயின்று வந்தால் நமக்குள் இருக்கும் காமம், குரோதம் போன்ற பகைவர்கள் அழிவார்கள்.