மகிமா – எதற்கும் அசைந்து கொடுக்காத தன்மை

தன்வழி யாகத் தழைத்திடுஞானமுந்
தன்வழி யாகத் தழைத்திடும் வையகந்
தன்வழி யாகத் தழைத்த பொருளெல்லாந்
தன்வழி தன்னரு ளாகிநின் றானே. – (திருமந்திரம் – 678)

விளக்கம்:
அட்டாங்கயோகத்தில் மகிமா என்னும் சித்தி பெறும் போது எல்லாம் நம் வசப்படும். மாயையால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது, எதற்கும் நாம் அசைந்து கொடுக்க மாட்டோம். நாமே நம் வசப்பட்டுத் தன்வழியில் நிற்கும் போது ஞானம் பெருகும். நாம் ஞானம் பெறும் போது நம்மைச் சுற்றி உள்ள  உலகம் துயர் நீங்கித் தழைத்திடும். நம்மால் துயர் நீங்கிய உலகம் தானும் யோக வழியில் நின்று சிவனருள் பெறும்.