யோகத்தினால் குளிர்ந்த தன்மை பெறுவோம்!

ஆகின்ற சந்திரன் தன்னொளி யாயவன்
ஆகின்ற சந்திரன் தட்பமு மாயிடும்
ஆகின்ற சந்திரன் தன்கலை கூடிடில்
ஆகின்ற சந்திரன் தானவ னாமே. – (திருமந்திரம் – 685)

விளக்கம்:
தொடர்ந்த தியானத்தில் சந்திரகலை கைகூடும் போது, மனம் நிலவைப் போன்ற குளிர்ச்சியைப் பெறும். நாமும் சந்திரனைப் போன்ற ஒளி கொண்டவராக இருப்போம். அட்டமாசித்தியான ஈசத்துவத்தைப் பெறும் போது நாமும் சந்திரனைப் போல உலகத்துக்கே குளிர்ந்த நன்மை அளிப்பவராய் ஆவோம்.