யோகத்தினால் குளிர்ந்த தன்மை பெறுவோம்!

ஆகின்ற சந்திரன் தன்னொளி யாயவன்
ஆகின்ற சந்திரன் தட்பமு மாயிடும்
ஆகின்ற சந்திரன் தன்கலை கூடிடில்
ஆகின்ற சந்திரன் தானவ னாமே. – (திருமந்திரம் – 685)

விளக்கம்:
தொடர்ந்த தியானத்தில் சந்திரகலை கைகூடும் போது, மனம் நிலவைப் போன்ற குளிர்ச்சியைப் பெறும். நாமும் சந்திரனைப் போன்ற ஒளி கொண்டவராக இருப்போம். அட்டமாசித்தியான ஈசத்துவத்தைப் பெறும் போது நாமும் சந்திரனைப் போல உலகத்துக்கே குளிர்ந்த நன்மை அளிப்பவராய் ஆவோம்.


Also published on Medium.