மென்மையான மெய்ப்பொருளைக் காணலாம்!

தன்மைய தாகத் தழைத்த கலையினுள்
பன்மைய தாகப் பரந்தஐம் பூதத்தை
வன்மைய தாக மறித்திடில் ஓராண்டின்
மென்மைய தாகிய மெய்பொருள் காணுமே. – (திருமந்திரம் – 687)

விளக்கம்:
யோகநெறியில் நின்று அதன் தன்மையை உணர்ந்து பயிற்சி செய்யும் போது, யோகக்கலை நம்முள் தழைக்கும். அந்நிலையில் ஒரே மெய்ப்பொருள் தான் ஐம்பூதங்களாகப் பேதப்பட்டு நமக்குக் காட்சி தருவது புரியும். ஐம்பூதங்களின் பேதங்களைக் கடந்து அனைத்தையும் ஒரே மெய்ப்பொருளாகப் பார்த்து ஓராண்டு பயிற்சி செய்து வந்தால் மென்மையான மெய்ப்பொருளை முழுமையாகக் காணலாம். அதுவே ஈசத்துவம் எனப்படும் அட்டமாசித்தியாகும்.


Also published on Medium.