வசித்துவம் பெறலாம்!

மெய்ப்பொரு ளாக விளைந்தது வேதெனின்
நற்பொரு ளாகிய நல்ல வசித்துவங்
கைப்பொரு ளாகக் கலந்த உயிர்க்கெல்லாந்
தற்பொரு ளாகிய தன்மைய னாகுமே. – (திருமந்திரம் – 688)

விளக்கம்:
ஈசத்துவம் என்னும் சித்தி பெற்று மெய்ப்பொருளை உணரலாம் என்பதைப் பார்த்தோம். மெய்ப்பொருளை உணர்வதால் ஏற்படும் நற்பலன் என்னவென்றால் அட்டமாசித்திகளில் தலை சிறந்த சித்தியான வசித்துவம் கைகூடும். வசித்துவம் கைகூடும் போது, எல்லா உயிர்களிலும் கலந்திருக்கும் தற்பொருளாகிய சிவபெருமானின் தன்மையைப் பெறலாம்.


Also published on Medium.