காற்று உயிரில் கலக்கும் வகை!

காலோ டுயிருங் கலக்கும் வகைசொல்லிற்
காலது அக்கொடி நாயகி தன்னுடன்
காலது ஐஞ்நூற் றொருபத்து மூன்றையுங்
காலது வேண்டிக் கொண்டஇவ் வாறே. – (திருமந்திரம் – 694)

விளக்கம்:
நமது உடலில் ஐந்நூற்றுப் பதிமூன்று நாடிகளிலும் நாடிகளின் நாயகியாகிய பராசக்தி கலந்து இருக்கிறாள். பிராணயாமத்தின் போது நமது மூச்சுக்காற்று பராசக்தியுடன் கலப்பதைக் காணலாம். மூச்சுக்காற்று எப்படி நம் உயிரில் கலந்து நின்று நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ளலாம். அட்டமாசித்தி அடைந்தவர்களுக்கு மட்டுமே இவற்றை எல்லாம் உணர்வது சாத்தியம்.


Also published on Medium.