தலையில் ஊறும் அமிர்தம்

ஆறது வாகும் அமிர்தத் தலையினுள்
ஆறது ஆயிரம் முந்நூற் றொடைஞ்சுள
ஆறது வாயிர மாகும் அருவழி
ஆறது வாக வளர்ப்ப திரண்டே. – (திருமந்திரம் – 695)

விளக்கம்:
யோகத்தினால் நம் தலையில் அமிர்தம் ஊறி ஆறு போலப் பெருகும். ஆறு போலப் பெருகும அவ்வமுதம் ஆயிரத்து முந்நூற்று ஐந்து நரம்புகள் வழியாகப் பாய்கின்றன. ஆயிரம் இதழ் கொண்ட தாமரையான சகசிரதளம் மலர்ந்து நிற்க இந்த அமிர்த ஊறலே சிறந்த வழியாகும். சிவசக்திகள் நமது உயிருடன் ஒன்றி நிற்கவும் இந்த அமிர்த ஊற்று உறுதுணையாக இருக்கிறது.


Also published on Medium.