ஐந்து முக நாயகி!

அஞ்சுடன் அஞ்சு முகமுள நாயகி
அஞ்சுடன் அஞ்சது வாயுத மாவது
அஞ்சது வன்றி இரண்டது வாயிரம்
அஞ்சது காலம் எடுத்துளும் ஒன்றே. – (திருமந்திரம் – 697)

விளக்கம்:
ஐந்து முகங்கள் கொண்ட சதாசிவத்துடன் வசிக்கும் ஐந்து முகங்கள் கொண்ட சக்தியின் பத்துக் கைகளில் பத்து ஆயுதங்கள் ஏந்தி இருப்பதைப் பார்க்கிறோம். பிராணாயாமம் செய்து யோகத்தில் நிற்பவர்கள், இடைகலை மூச்சின் போது சகசிரதளத்தில் மலரும் ஆயிரம் இதழ்களில் ஒவ்வொரு இதழிலும் சக்தியின் முகத்தைக் காண்பார்கள். அதே போல் பிங்கலை மூச்சின் போதும் ஆயிரம் இதழ்களில் சக்தியின் ஆயிரம் முகங்களைக் காண்பார்கள். யோக காலத்தில் ஒரே சக்தி இரண்டாயிரம் சக்திகளாகத் தோன்றுவதைக் காணலாம்.


Also published on Medium.