காலமும் திரண்டு நின்று உதவி செய்யும்

இரண்டினின் மேலே சதாசிவ நாயகி
இரண்டது கால்கொண் டெழுவகை சொல்லில்
இரண்டது ஆயிரம் ஐம்பதொ டொன்றாய்த்
திரண்டது காலம் எடுத்தது அஞ்சே. – (திருமந்திரம் – 696)

விளக்கம்:
பிராணாயாமத்தின் போது இடைகலை, பிங்கலை ஆகிய சீரான முச்சின் ஓட்டத்தில் சதாசிவ நாயகியாகிய சக்தி மேலெழுந்து சகசிரதளத்திற்குச் செல்கிறாள். ஐந்து முகங்கள் கொண்ட சதாசிவ நாயகி இரண்டு வகையான மூச்சுக்காற்றில் ஏறும் போது அவள் ஆறு ஆதாரங்களில் உள்ள ஐம்பத்தோரு எழுத்துக்களை உணர்த்தி சகசிரதளத்தில் உள்ள ஆயிரம் இதழ் கொண்ட தாமரையை விரியச் செய்கிறாள். நாயகியின் இந்தச் செயலில் காலமும் திரண்டு நின்று உதவி செய்யும்.


Also published on Medium.