கலை நாயகி!

முன்னெழும் அக்கலை நாயகி தன்னுடன்
முன்னுறு வாயு முடிவகை சொல்லிடின்
முன்னுறும் ஐம்பத் தொன்றுடன் அஞ்சுமாய்
முன்னுறு வாயு முடிவகை யாமே. – (திருமந்திரம் – 699)

விளக்கம்:
பிராணாயாமத்தின் போது மூலாதாரத்தில் இருந்து எழும் கலை நாயகியாகிய பராசக்தியை, நாம் உள்ளே இழுக்கும் மூச்சுக்காற்று பற்றிக்கொள்ளும் வகையை இப்படிச் சொல்லலாம். அக்கலை நாயகி தன்னுடைய ஐந்து முகங்களால் ஆறு ஆதாரங்களில் உள்ள ஐம்பத்தோரு எழுத்துக்களை நமக்கு உணர்த்தி தெளிவு ஏற்படுத்துகிறாள்.


Also published on Medium.