ஆய்ந்து அறிய முடியாத நாயகி

ஆய்வரும் அத்தனி நாயகி தன்னுடன்
ஆய்வரு வாயு அளப்பது சொல்லிடில்
ஆய்வரும் ஐஞ்ஞூற்று முப்பத்தொன் றொன்பது
மாய்வரு வாயு வளப்புள் ளிருந்ததே. – (திருமந்திரம் – 700)

விளக்கம்:
ஆய்ந்து அறிந்து கொள்ள முடியாத தனித்தன்மை கொண்ட நாயகியாம் நம் பராசக்தி. பிராணாயமத்தின் போது நாம் இழுக்கும் மூச்சுக்காற்றுடன் அந்நாயகி எந்த அளவுக்கு கலந்திருக்கிறாள் என்பதை ஆய்ந்து அறிந்தால், பராசக்தியுடன் எழும் மூச்சுக்காற்று ஐந்நூற்று முப்பத்து ஒன்பது நாடிகளை நிரப்புகிறது. இதனால் உள்ளே நமது மூச்சு செல்லும் பாதை வளம் பெறுகிறது.


Also published on Medium.