சிவனிடம் உள்ள சந்திரனின் ஒளியை உணரலாம்

சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவில்
சந்திரன் தானும் தலைப்படும் தன்மையைச்
சந்தியிலே கண்டு தான்ஆம் சகமுகத்து
உந்திச் சமாதி உடையொளி யோகியே. – (திருமந்திரம் – 704)

விளக்கம்:
பிராணாயாமத்தின் போது இடங்கலை, பிங்கலை ஆகிய மூச்சுக்காற்றில் பரம்பொருளும் கலந்து நிற்கிறது. இதனால் தூணைப் போல நிலையாக இருக்கும் சுழுமுனையின் உச்சியிலே, சிவபெருமானின் திருமுடியில் உள்ள சந்திரனின் ஒளியை உணரலாம். அட்டாங்க யோகத்தில் நிற்பதால், நமது உடலில் உயிர் உள்ளபோதே சமாதி நிலையை அடைந்து யோகி ஆகலாம்.


Also published on Medium.