கருத்தை நடு நாடியில் நிறுத்துவோம்

புடையொன்றி நின்றிடும் பூதப் பிரானை
மடையொன்றி நின்றிட வாய்த்த வழியில்
சடையொன்றி நின்றஅச் சங்கர நாதன்
விடையொன்றி லேறியே வீற்றிருந் தானே – 715

விளக்கம்:
தியானத்தில் நமது ஐம்பொறிகளும் நடுவழியான சுழுமுனையில் நில்லாமல், அங்கும் இங்குமாக வேறு விஷயங்களில் ஒன்றி அலைகிறது. மனத்தை பக்குவப்படுத்தி நம்முடைய கவனம் எல்லாம் நடு நாடியில் அசையாமல் நிறுத்தினால், சிரசின் மேலே சடையுடன் கூடிய சிவபெருமான் காளையில் அமர்ந்திருக்கும் காட்சியைக் காணலாம்.

புடை ஒன்றி – மனம் நேராக நில்லாமல் அருகில் உள்ள வேறு விஷயங்களில் ஒன்றுதல்.