மூச்சுக்காற்று ஒளிமயமாய் மாறும்

சாதக மானஅத் தன்மையை நோக்கியே
மாதவ மான வழிபாடு செய்திடும்
போதக மாகப் புகலுறப் பாய்ச்சினால்
வேதக மாக விளைந்து கிடக்குமே – 717

விளக்கம்:
இரும்பினைப் பொன்னாக மாற்றும் இரசவாதம் போல், அட்டாங்கயோகத்தில் நின்று நம் மூச்சுக்காற்றை ஒளிமயமாக மாற்ற முடியும். நடுநாடியில் கருத்தை நிறுத்திப் பெருந்தவம் செய்து மூச்சுக்காற்றை சகசிரதளத்தில் புகச்செய்தால் அக்காற்று ஒளிமயமாக மாறும். அதனால் நாம் பல சாதகங்களைப் பெறலாம்.

வேதகம் – இரும்பைப் பொன்னாக்கும் இரசவாதம்.