சிவ அருள் பெருஞ்செல்வம்

சோதனை தன்னில் துரிசறக் காணலாம்
நாதனும் நாயகி தன்னிற் பிரியும்நாள்
சாதன மாகுங் குருவை வழிபட்டு
மாதன மாக மதித்துக்கொ ளீரே – 721

விளக்கம்:
யோகப்பயிற்சியின் போது, குண்டலினியின் வழியே மேலே ஏறும் பிராணவாயு சிரசிற்கு மேலே செல்லும். அங்கே குண்டலினியாகிய சக்தியில் இருந்து சிவன் பிரிந்து மேற்செல்லும் போது சிவயோக சமாதி உண்டாகும். சக்தியில் இருந்து சிவன் பிரியும் இக்கணத்தை ஆத்ம சோதனையில் தெளிவாகக் காணலாம். அங்கே குருவாகக் காட்சி தரும் சிவபெருமானை வழிபட்டு, அவ்வருளைப் பெருஞ்செல்வமாக ஏற்றுக் கொள்வோம்.