பிராணன் என்னும் குதிரையைக் கட்டுப்படுத்துவோம்

ஈராறு கால்கொண் டெழுந்த புரவியைப்
பேராமற் கட்டிப் பெரிதுண்ண வல்லீரேல்
நீரா யிரமும் நிலமாயிரத் தாண்டும்
பேராது காயம் பிரான்நந்தி ஆணையே – 722

விளக்கம்:
இடைகலை, பிங்கலை ஆகிய இரண்டு நாடிகளின் வழியாக மேலெ எழும் பிராணன் ஆகிய குதிரையை வசப்படுத்தி, அங்கும் இங்கும் வழி மாறாமல் நேராக மேலே ஏறச் செய்வோம். பிராணன் தடுமாறாமல் நேரான பாதையில் பயணம் செய்தால், உச்சந்தலையில் அமுதம் ஊறும். அவ்வமுதத்தை அதிகமாக பெருக்கி, அவற்றை உட்கொள்ள வல்லவர்கள், நீரில் ஆயிரம் ஆண்டுகளும் நிலத்தில் ஆயிரம் ஆண்டுகளும் சமாதியில் இருக்கும் அளவுக்கு உடல் உறுதியோடு இருக்கும். இது நந்தியம்பெருமானின் ஆணை.

ஈராறு கால் – இடைகலை, பிங்கலை ஆகிய இரண்டு வழிகளைக் கொண்ட மூச்சுக்காற்று