சுழலும் பெருங்கூற்றை விரட்டலாம்

சுழலும் பெருங்கூற்றுத் தொல்லைமுன் சீறி
அழலும் இரதத்துள் அங்கியுள் ஈசன்
கழல்கொள் திருவடி காண்குறில் ஆங்கே
நிழலுளுந் தெற்றுளும் நிற்றலும் மாமே – 737

விளக்கம்:
கூற்று எனப்படும் யமன் எப்போதும் எங்கும் சுழன்றபடி இருக்கிறான். நம் உடலின் மூலாதாரத்தில் பிரகாசமாக ஒளிவிட்டு அமர்ந்திருக்கும் ஈசன், சீறியபடி சுற்றிவரும் யமனைத் துரத்தி விடுகிறான். மூலாதாரத்தில் மனம் குவித்து அங்கு இருக்கும் ஈசனின் திருவடியைக் கண்டு யோகப் பயிற்சியை மேற்கொண்டால், நாம் ஈசனின் திருவடி நிழலில் நின்று அந்த சிவபெருமானின் நெருக்கத்தை உணரலாம்.

அழலும் – பிரகாசிக்கும்
இரதம் – உடல்
தெற்று – செறிவு, நெருக்கம்


Also published on Medium.