மான்கன்று போன்ற இளமையான தோற்றத்தைப் பெறலாம்

நான்கண்ட வன்னியும் நாலு கலையேழுந்
தான்கண்ட வாயுச் சரீர முழுதொடும்
ஊன்கண்டு கொண்ட உணர்வு மருந்தாக
மான்கன்று நின்று வளர்கின்ற வாறே – 738

விளக்கம்:
நாம் யோகப்பயிற்சி செய்யும் போது, குண்டலினியாகிய அக்னி, அகாரம், உகாரம், மகாரம், விந்து ஆகிய நான்கு கலைகள், ஏழு ஆதாரங்கள் ஆகியவற்றை உணரலாம். பயிற்சியின் போது நாம் பிராணனை உற்றுக் கவனித்து, உடல் முழுவதும் பிராணனின் இயக்கத்தை உணர வேண்டும். மனம் சிதறாமல் இவ்வாறு பிராண இயக்கத்தை உணர்ந்து வந்தால், மான் கன்று போன்ற இளமையான தோற்றத்தைப் பெறலாம்.

வன்னி – அக்னி
ஊன் – உடல்


Also published on Medium.