பயிலும் யோகம் பற்றி வெளியே பெருமை பேச வேண்டாம்

முறைமுறை ஆய்ந்து முயன்றிலர் ஆகில்
இறைஇறை யார்க்கும் இருக்க அரிது
மறையது காரணம் மற்றொன்றும் இல்லை
பறைஅறை யாது பணிந்து முடியே – 748

விளக்கம்:
யோகமுறைகள் பற்றி யோகநூல்களில் சிறிது மறைபொருளாகவே சொல்லபடுகின்றன. அதற்குக் காரணம் வேறொன்றுமில்லை, யோகம் பயில்பவர்கள் யோகமுறைகளை தமது அனுபவத்தின் மூலம் ஆராய்ந்து யோகநிலையில் முன்னேற வேண்டும். அவர்களுக்கே இறைவன் உள்ளே நிரந்தரமாகத் தங்குவான். தமது யோகப்பயிற்சியைப் பற்றி, பிறரிடம் பெருமை பேசாமல், அதை தனி அனுபவமாகப் பணிவுடன் செய்வதே சிறந்ததாகும்.


Also published on Medium.