உடலில் வலு இருக்கும் போதே யோகம் பயில்வோம்

முடிந்தது அறியார் முயல்கின்ற மூர்க்கர்
இடிஞ்சில் இருக்க விளக்குஎரி கொண்டு
கடிந்துஅனல் மூளக் கதுவவல் லார்க்கு
நடந்திடும் பாரினில் நண்ணலும் ஆமே – 749

விளக்கம்:
யோக வழியில் நிற்பவர்கள், தமது கவனத்தைக் குண்டலினியில் நிறுத்திப் பயிற்சி செய்ய வேண்டும். அகலில் எண்ணெய் இருக்கும் போதே திரியைத் தூண்டி விளக்கை எரிய வைப்பதைப் போல, நமது உடலில் வலு இருக்கும் போதே மூலாதாரம் என்னும் அக்கினியைத் தூண்டி விட்டு குண்டலினி சகசிரதளத்தை அடையச் செய்யவேண்டும். அப்படிச் செய்ய வல்லவர்கள் காலச்சக்கரத்தின் சுழற்சியில் சிக்காமல், நிலைபெற்று வாழ்வார்கள்.

முடிந்தது அறியார் – தமது கவனத்தைக் குண்டலினியின் இயக்கத்தோடு முடிச்சு போட்டவாறு வைத்திருக்கத் தெரியாதவர்.


Also published on Medium.