சிவயோகியரால் இந்த உலகம் நன்மை பெறுகிறது

உயருறு வார்உல கத்தொடுங் கூடிப்
பயனுறு வார்பலர் தாமறி யாமற்
செயலுறு வார்சிலர் சிந்தையி லாமல்
கயலுறு கண்ணியைக் காணகி லாரே – 760

விளக்கம்:
மனம் ஒன்றி, அறிவு கூர்ந்து, பல ஆண்டுகள் தொடர்ந்து யோகப்பயிற்சி செய்பவர்கள் உயர்வு அடைவார்கள். இது போன்ற யோகிகள் இந்த உலகத்தில் வாழ்வதால், இந்த உலகம் நன்மை பெறுகிறது. சிவயோகிகளால் நன்மை பெறுகிறோம் என்பதை உலகத்தார் ஆகிய நாம் உணர்வதில்லை. சிவயோகியரால் கிடைக்கும் நன்மை பற்றிய சிந்தை இல்லாமல், நாம் தான் எல்லாவற்றையும் சாதிக்கிறோம் என நினைப்பவர்கள், கயற்கண்ணியாகிய பராசக்தியைக் காண மாட்டார்கள்.