இறை அனுபவத்தை பயிற்சியால் மட்டுமே பெற முடியும்

காணகி லாதார் கழிந்தோடிப் போவர்கள்
நாணகி லார்நயம் பேசி விடுவர்கள்
காணகி லாதார் கழிந்த பொருளெலாம்
காணகி லாமற் கழிகின்ற வாறே – 761

விளக்கம்:
முந்தைய பாடல்களில் சொல்லப்பட்டவாறு, தொடர்ந்து யோகப்பயிற்சி செய்பவர்கள் சிவசக்தியரைக் காண்பார்கள். யோகத்தில் நாட்டம் இல்லாதவர்கள் காலச்சக்கரத்தின் சுழற்சியில் சிக்கி அழிவார்கள். யோகத்தை அனுபவத்தில் உணராத வெட்கம் கெட்டவர்கள், சாத்திரத்தைப் பற்றி நயமாகப் பேசிக் காலத்தை வீணாக்குகிறார்கள். இறை அனுபவத்தை யோகப்பயிற்சியினால் மட்டுமே உணர முடியும். நாம் அந்த அனுபவத்தைப் பெறாமல் காலத்தை வீணாகக் கழிக்கிறோம்.