கர்மவினைகளுக்குக் கட்டுப்பட மறுப்போம்!

மனையினில் ஒன்றாகும் மாதம்மும் மூன்றும்
சுனையில்ஒன் றாகத் தொனித்தனன் நந்தி
வினையற ஓங்கி வெளிசெய்து நின்றால்
தனையுற நின்ற தலைவனு மாமே – 785

விளக்கம்:
யோகப்பயிற்சியை முப்பத்து நாளாவதாகத் தொடரும் போது, நம்முள்ளே சிவசக்தியர் ஒன்று கூடி நிற்பார்கள். தெளிந்த நீரில் தோன்றும் காட்சி போல, நந்தியம்பெருமான் நம்முள்ளே காட்சி தந்து வழி நடத்துவான். கர்மவினைகளுக்குக் கட்டுப்படாமல், மனம் துவாதசாந்தப் பெருவெளியில் ஒன்றி நின்றால், தலைவனான நம் சிவபெருமான் நம்முடன் ஒன்றி நிற்பான்.


Also published on Medium.