அடர்ந்த பகையும் ஒன்றுமில்லாமல் போகும்

ஒன்றிய நாள்கள் ஒருமுப்பத் தொன்றாகிற்
கன்றிய நாளுங் கருத்துற மூன்றாகும்
சென்றுயிர் நாலெட்டுஞ் சேரவே நின்றிடின்
மன்றியல் பாகு மனையில் இரண்டே – 784

விளக்கம்:
யோகப்பயிற்சியை முப்பதாவது நாளாகத் தொடர்ந்தால், அடுத்த எழாவது நாளிலே பகை எல்லாம் ஓடி விடும் என்பதை முந்தைய பாடலில் பார்த்தோம். மனம் ஒன்றி முப்பத்தோராவது நாள் பயிற்சியைத் தொடரும்போது, எவ்வளவு அடர்ந்த பகையும் அடுத்த மூன்றாவது நாளில் விலகும். முப்பத்து இரண்டாவது நாளாக சகசிரதளத்தில் மனம் நின்று யோகம் செய்தால், அடுத்த  இரண்டாவது நாளில் பகை எல்லாம் விலகி இயல்பு நிலைக்கு மாறலாம்.


Also published on Medium.