எல்லா நாளும் முகூர்த்த நாளே!

ஆயும் பொருளும் அணிமலர் மேலது
வாயு விதமும் பதினா றுளவலி
போயம் மனத்தைப் பொருகின்ற வாதாரம்
ஆயவு நாளு முகூர்த்தமு மாமே – 796

விளக்கம்:
நாம் ஆராயும் பரம்பொருள் எங்கே இருக்கிறது என்றால், நம் உச்சந்தலையில் உள்ள சகசிரதளம் எனப்படும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரின் மேல் அந்தப் பரம்பொருள் விளங்குகிறது. சுழுமுனையில் பொருந்தி நமது மூச்சுக்காற்று மேலே உள்ள சகசிரதளத்தைத் தொடும்போது நாம் பரம்பொருளை உணரலாம். அந்நேரத்தில் வலி மிகுந்த நம் மனம் வலி எல்லாம் நீங்கி, நம்முடைய ஆதாரமான பரம்பொருளுடன் பொருந்தி நிற்கும். பரம்பொருளுடன் மனம் பொருந்தி நின்றால், நம்முடைய ஆயுளில் எல்லா நாளும் நல்ல முகூர்த்த நாளே!

மூச்சுக்காற்று சகசிரதளத்தைத் தொடும்போது பதினாறு வகையான வாயு அங்கே வெளிப்படும்.

ஆயும் பொருள் – நாம் ஆராயும் பரம்பொருள், அணிமலர் – நாம் சகசிரதளத்தில் அணிந்திருக்கும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலர், வலி போய மனத்தை – வலி போய் அம்மனத்தை, பொருகின்ற – பொருந்துகின்ற,


Also published on Medium.