சோம்பலை விட்டு கேசரியோகம் செய்வோம்

இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித்
துதிக்கையால் உண்பார்க்குச் சோர்வும் வேண்டாம்
உறக்கத்தை நீக்கி உணரவல் லார்க்கட்கு
இறக்கவும் வேண்டாம் இருக்கலு மாமே – 801

விளக்கம்:
கேசரியோக நிலையில் இடப்பக்க நாடி, வலப்பக்க நாடி ஆகிய இரண்டையும் சுழுமுனையில் நிறுத்த வல்லவர்களுக்கு சோர்வு என்பதே கிடையாது. நாம் நமது சோம்பலை விட்டு விட்டு, கேசரியோகம் பயிற்சி செய்வோம். அப்படித் தொடர்ந்து கேசரியோகம் பயின்றால் மரணபயம் இல்லாமல் வாழலாம்.

இடக்கை – இடது பக்க நாடி, வலக்கை – வலது பக்க நாடி, துதிக்கை – நடுநாடியாகிய சுழுமுனை, உறக்கம் – சோம்பல்