சுழுமுனை நாடியில் அமுதத்தைப் பெறலாம்

நாவின் நுனியை நடுவே சிவிறிடிற்
சீவனும் அங்கே சிவனும் உறைவிடம்
மூவரும் முப்பத்து மூவருந் தோன்றுவர்
சாவதும் இல்லை சதகோடி யூனே – 803

விளக்கம்:
இட நாடி, வல நாடி ஆகிய இரண்டையும் சுழுமுனையில் நிறுத்தி, கேசரி யோகப்பயிற்சி செய்தால், சுழுமுனை நாடியில் அமுதத்தைப் பெறலாம். அந்த யோகநிலையில், மேல்நோக்கி இருக்கும் குண்டலினியின் நாவை லேசாக விசிறினால் அமுத ருசியைக் காணலாம், அங்கே சிவனும், நம் சீவனும் கூடி இருப்பதை உணரலாம். சிவனும் சீவனும் கூடும் இடத்தில், பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆகிய மூன்று தெய்வங்களும், முப்பத்து மூன்று கோடி தேவர்களும் தோன்றுவார்கள். இவ்வாறு நாவினில் அமுதம் தோன்றக் கிடைத்தவர்கள் நூறு கோடி வருஷங்கள் வாழ்வார்கள்.

சிவிறிடிற் – விசிறினால், சதகோடி – நூறு கோடி, ஊன் – உடல்


Also published on Medium.