கங்கையாகிய வான் நீர்!

ஊனீர் வழியாக வுண்ணாவை யேறிட்டுத்
தேனீர் பருகிச் சிவாய நமவென்று
கானீர் வரும்வழி கங்கை தருவிக்கும்
வானீர் வரும்வழி வாய்ந்தறி வீரே – 809

விளக்கம்:
உள்நாக்கின் பக்கத்தில் இருக்கும் அண்ணாக்கில் குண்டலினி சக்தியை மேலே ஏற்றி உடலில் சுரக்கும் இனிய அமுத நீரை சிவாயநம என்று சொல்லி, அந்நீரை வீணாகாமல் காக்க வேண்டும். அப்படி ஊறும் அமுதத்தைக் காத்து பயிற்சி செய்து வந்தால், கங்கை நீராகிய உச்சியில் சுரக்கும் அமுத நீரை பருகலாம். கேசரியோகம் செய்பவர்களுக்கு அந்த நல் வாய்ப்பு அமையும்.

ஊனீர் – உடலில் சுரக்கும் அமுத நீர், உண்ணா – உள் நாக்கு, தேனீர் – தேன் போன்ற இனிய அமுத நீர், கானீர் – சுரக்கும் அமுத நீரை காத்தல், வானீர் – வானத்தில் இருந்து சுரக்கும் அமுத நீர்