தத்துவஞானம் என்னும் செல்வத்தைப் பெறலாம்

குணமது வாகிய கோமள வல்லி
மணமது வாக மகிழ்ந்தங் கிருக்கில்
தனமது வாகிய தத்துவ ஞானம்
இனமது வாக இருந்தனன் தானே – 816

விளக்கம்:
கேசரியோகத்தின் போது, அழகும் இளமையும் கொண்ட பராசக்தி நம்முள்ளே குடி கொள்வாள் என்பதை முந்தைய பாடல்களில் பார்த்தோம். குண்டலினி சக்தியாகிய பராசக்தி, சகசிரதளத்தில் இருக்கும் சிவபெருமானுடன் கூடி மகிழ்ந்தால், அவர்கள் அருளாலே நமக்கு தத்துவ ஞானம் எல்லாம் விளங்கப் பெறும். நாமும் அந்த சிவபெருமானின் அருள் பெற்று அவனுடைய ஆளுகையில் நீங்காது இருப்போம்.

கேசரியோகத்தினால் தத்துவஞானம் என்னும் செல்வத்தைப் பெறலாம்.

கோமளம் – இளமை, மென்மை, அழகு, மணம் – கூடுதல்