மதி மண்டலம் மலரும்

இருந்த பிராணனும் உள்ளே எழுமாம்
பரிந்தஇத் தண்டுடன் அண்டம் பரிய
விரிந்தஅப் பூவுடன் மேலெழ வைக்கின்
மலர்ந்தது மண்டலம் வாழலு மாமே – 817

விளக்கம்:
தொடர்ந்து கேசரியோகப் பயிற்சி செய்யும் போது, மூலாதாரத்திலேயே இருக்கும் பிராணன், மேலே எழும். மேலே எழும் அந்த மூச்சுக்க்காற்று, பிரியத்துடன் சுழுமுனை நாடியை நாடி இன்னும் மேலே எழும். இன்னும் மேலே சென்றால், சகசிரதளத்தில், அந்த சிவபெருமானின் உலகத்தில் உள்ள ஆயிரம் இதழ் கொண்ட அந்தத் தாமரையை நம் பிராணன் தொட்டு இன்னும் மேலே எழும். அப்படி உச்சியில் பிராணன் எழும்போது, நம் மதி மண்டலமே மலர்ந்து நிற்கும். நாம் மகிழ்வுடன் வாழலாம்.

கேசரியோகத்தினால் மதி மண்டலம் மலர்ந்து, நாம் மகிழ்வுடன் வாழலாம்.

பரிதல் – பிரியம் கொள்ளுதல், தண்டு – சுழுமுனை நாடி,


Also published on Medium.