முதலைக்கு பயந்து கரடியிடம் மாட்டிக் கொண்ட கதை

ஆற்றிக் கிடந்த முதலைகண் டஞ்சிப்போய்
ஈற்றுக் கரடிக் கெதிர்ப்பட்ட தன்னொக்கும்
நோற்றுத் தவஞ்செய்யார் நூலறி யாதவர்
சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே. – (திருமந்திரம் – 1642)

விளக்கம்:
விரதம் இருந்து தவம் செய்ய முயலாதவர் சாஸ்திரம் அறியாதவர் ஆவார். அவர்கள் உணவுக்காக பொருள் தேடி அலைந்து வருந்துகின்றனர். இது எப்படி இருக்கிறது என்றால், ஒருவன் ஆற்றில் கிடக்கும் முதலைக்கு பயந்து ஓடிப் போய் குட்டியை ஈன்றுள்ள கரடியிடம் மாட்டிக் கொள்வதை போலாகும்.

In fear of crocodile, they ran out of river
but get caught by the bear having a cub.
Like this the unlearned people run away from Holy practices,
They are always roaming in search for food.