உயிரின் வடிவம்

மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறுநா றாயிரத்து ஒன்றே. – (திருமந்திரம் – 2011)

விளக்கம்:
உடலில் பொருந்தியுள்ள உயிரின் வடிவத்தை இப்படி சொல்லலாம். பசுவின் மயிர் ஒன்றை நூறாக பிளந்து, அந்த நூறில் ஒன்றை ஆயிரம் பகுதியாக்கினால் அது உயிரின் வடிவம்.

உயிரின் வடிவம், பசுவின் ஒரு மயிரில் நூறாயிரத்தில் ஒரு பங்கு. அதாவது உயிரின் வடிவம் மிகவும் நுன்மையானது, காண முடியாதது.

(மேவிய – பொருந்திய,  சிவன் – உயிர்,   கோ – பசு).

To speak about the size of the soul, it is like
splitting a cow's hair in hundred parts
and divide each part into thousand.
The size of Soul is thus one of hundred thousand parts.