சிவமணம் பூத்தது

பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோற்
சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது
ஓவியம் போல உணர்ந்தறி வாளர்க்கு
நாவி யணைந்த நடுதறி யாமே. – (திருமந்திரம் – 1459)

விளக்கம்:
பூவினுள் வாசம் பொருந்தியிருப்பது போல நம் உயிருக்குள் சிவமணம் பூத்திருக்கிறது. இந்த விஷயம் ஒரு சித்திரத்தைப் போல் நம் மனதில் பதிந்து விட்டால் புனுகுப்பூனை அணைத்த தூண் ஆவோம்.

புனுகுப்பூனை தூணை அணத்துக் கொண்டால் அந்த தூண் மணம் பெறும். அது போல் சிவன் நம்மை அணைத்துக் கொள்வான், நாம் சிவமணம் பெறுவோம்.

(கந்தம் – வாசனை,   நாவி – புனுகுப்பூனை,    நடுதறி – நடப்பட்ட தூண்)

The flowers have fragrance within itself
Like that, our souls have the fragrance of Siva.
If we get the clear picture of this truth
We'll be like planted post, embraced by the musk cat.