திராணி இல்லாத பிராணிகள்

பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற்கு அரிய பிரானடி பேணார்
பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற்கு அரியதோர் பேறுஇழந் தாரே. – (திருமந்திரம் – 2090)

விளக்கம்:
பெறுவதற்கு அரியதான பிறவியைப் பெற்றிருந்தாலும், நாம் அதன் அருமை தெரியாமல், பெறுவதற்க்கு அரியதான சிவபெருமானின் திருவடியை போற்றாமல் இருக்கிறோம்.

மனிதனாக பிறப்பது மிக அரிய விஷயம். அதை நாம் உணராமல் பெறுதற்கரிய சிவபேற்றை அடையும் வாய்ப்பை இழக்கிறோம்.

It is rare to get this birth
Yet we are not seeking Lord's feet.
It is rare to get birth as human
Yet we are missing the rare to get blessings of Siva.

சிவானந்தவல்லி!

நேரிழை யாவாள் நிரதிச யானந்தப்
பேருடை யாளென் பிறப்பறுத்து ஆண்டவள்
சீருடை யாள்சிவன் ஆவடு தண்டுறை
சீருடை யாள்பதம் சேர்ந்திருந் தேனே.  – (திருமந்திரம் –78)

விளக்கம்:
சிறந்த நகைகளை அணிந்துள்ள சக்தி, சிவானந்தவல்லி என்ற பெயர் கொண்டவள். எல்லையற்ற சிறப்பை கொண்ட அவள் என் பிறப்பை போக்கி ஆட்கொண்டாள். சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருவாவடுதுறை யாகிய திருத்தலத்தைத் தனதாக உடையவள். அந்த சக்தியின் திருவடியை சேர்ந்திருந்தேனே!

(நேரிழை – சிறந்த நகைகளை அணிந்த பெண், பிறப்பறுத்து – அடுத்து பிறவியில்லாமல் செய்து, சீருடையாள் – புகழ் உடைய, செல்வம் உடைய, பதம் – திருவடி )

Jeweled with rich ornaments, named Eternal Bliss,
She remove our further births.
Of great fame, Mistress of Avaduthurai Siva,
I reached her Holy Feet and Surrender.